'போர்குடி' மூலம் இயக்குநர் ஆகும் நடிகர்

ஆரஞ்ச் மிட்டாய், தேவராட்டம், திரவுபதி, மண்டேலா, ரத்தசாட்சி உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் ஆறு பாலா. இவர் இயக்குநராக அறிமுகமாகும் படம், ‘போர்குடி’. 11 வில்லேஜர்ஸ் ஃபிலிம் புரொடக்‌ஷன், யாதவ் ஃபிலிம் புரொடக்‌ஷன் வழங்கும் இந்தப் படத்தில், ஆர்.எஸ்.கார்த்திக், புதுமுகம் ஆராத்யா ஜோடியாக நடித்துள்ளனர். படத்தை வில்லியம் அலெக்சாண்டரின் பிக்சர்பாக்ஸ் கம்பெனி வெளியிட இருக்கிறது.
படம் பற்றி ஆறுபாலா கூறும்போது, பழிவாங்குவதற்காக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்துவதைப் பற்றிய படம் இது. தென் தமிழகத்தில் நடக்கும் கதையாக உருவாகி இருக்கிறது. மனித நேயம் பற்றிய செய்தியை படம் பேசும்.கதை யாரையும் புண்படுத்தாது. அனைத்து வித ரசிகர்களையும் ஈர்க்கும் விதத்தில் உருவாக்கியுள்ளோம். செந்தமிழ் இசையமைத்துள்ளார். ரமேஷ் ஏழுமலை ஒளிப்பதிவு செய்துள்ளார். படப்பிடிப்பு முடிந்துவிட்டது” என்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
No comments