8 வரஙகளககப பறகதன பதய படஙகள ஓடடயல வளயட வணடம: தரயரஙக உரமயளரகள தரமனம

சென்னை: திரையரங்குகளில் வெளியான 8 வாரங்களுக்குப் பிறகுதான் புதிய திரைப்படங்களை ஓடிடியில் வெளியிட வேண்டும் என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக, சங்கத்தின் பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பின்னர், திரையரங்க அதிபரும், சங்கத்தின் பொதுச் செயலாளருமான ரோகிணி பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
No comments