Breaking News

“புரொமோஷனில் கலந்துகொள்ளாதது நயன்தாராவின் விருப்பம்” - நடிகர் விஷால்

சென்னை: “நயன்தாரா எந்தப் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க மாட்டார். அது அவரின் தனிப்பட்ட உரிமை. நீங்கள் வந்தே ஆகணும் என்று அவர்களை கட்டாயப்படுத்த முடியாது” என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

தனியார் கல்லூரி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் நடிகர் விஷால் கூறியது: அரசியல் என்பது சமூக சேவை. மக்களுக்கு தேவையானதை செய்வது தான் அரசியல். அதை பிஸினஸாக பார்க்க கூடாது. அந்த வகையில் நான் ஏற்கெனவே அரசியலுக்கு வந்துவிட்டேன். ஆக நான் இனிமேலும் அரசியலுக்கு வரவேண்டுமென்பதில்லை. அரசியல்வாதிகள் நடிகர்களாக மாறி நடிக்கும்போது, ஒரு நடிகர் அரசியல்வாதியாவதில் எந்த தவறுமில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

No comments