Breaking News

எஸ்.ஜே.சூர்யா... திரையை தெறிக்கவிடும் பன்முகக் கலைஞன் | பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

90களின் இறுதியில் இயக்குநராக தடம் பதித்து இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வரும் எஸ்.ஜே.சூர்யாவின் பிறந்தநாள் இன்று (ஜூலை 20).

1999-ஆம் ஆண்டு வெளியான தனது முதல் படமான ‘வாலி’ மூலம் தமிழ் சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்தார் எஸ்.ஜே.சூர்யா. ஒரே போன்ற தோற்றம் கொண்ட இரட்டையர்கள் - தம்பி மனைவியை அண்ணன் அடையத் துடிப்பது என்ற கொஞ்சம் விவகாரமான கதையை துணிச்சலுடன் கையில் எடுத்து அதை ரசிக்கும்படி திரையில் காட்சிப்படுத்தியிருப்பார். இப்படம் அஜித் - சிம்ரன் - எஸ்.ஜே.சூர்யா மூவருக்குமே ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. ஒரே ஒரு பாடலில் ஜோதிகாவை அறிமுகப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்கவும் செய்திருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

No comments