Breaking News

“குற்றப் பரம்பரை வெப் சீரிஸ் எடுக்கிறேன்... சுப்ரமணியபுரம் 2 வேண்டாம்” - சசிகுமார் பகிர்வு

சென்னை: “சுப்ரமணியபுரம் 2 வேண்டாம் என நினைக்கிறேன். அடுத்து ‘குற்றப் பரம்பரை’ வெப் சீரிஸ் இயக்குகிறேன்” என இயக்குநரும், நடிகருமான சசிகுமார் தெரிவித்துள்ளார்.

15 ஆண்டுகள் நிறைவையொட்டி ‘சுப்ரமணியபுரம்’ படம் இன்று ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இதன் முதல் காட்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ஜெய், “இன்றைக்கு சுப்ரமணியபுரம் ரீ-ரிலீஸ் செய்துள்ளோம். இன்றைக்கு தான் முதல் நாள் ரிலீஸ் போன்ற உணர்வு திரையரங்குக்கு உள்ளே கிடைத்தது. இன்னும் இந்தப் படத்தின் மீது எல்லோரும் மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளனர். அந்த ஹைப் இன்னும் குறையவில்லை. நல்ல படைப்புக்கு எப்போதும் உயிர் இருக்கும் என்பதை உணரமுடிகிறது. இன்றைக்கும் அரங்கு நிறைந்த கூட்டத்தை பார்ப்பது சந்தோஷமாக உள்ளது” என்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

No comments