தென்னிந்திய தயாரிப்பாளர்களிடம் இருந்து பாலிவுட் கற்றுக்கொள்ள வேண்டும்: நடிகர் சன்னி தியோல் அறிவுரை

பிரபல இந்தி நடிகர் சன்னி தியோல். இவர் இப்போது ‘ஜாட்’ என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார். இதில் ரெஜினா காஸண்ட்ரா, ரன்தீப் ஹுடா, ரம்யா கிருஷ்ணன், ஜெகபதி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தைத் தெலுங்கு இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கியுள்ளார். ‘புஷ்பா’வைத் தயாரித்த தெலுங்கு திரைப்பட நிறுவனமான மைத்ரிமூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது.
ஏப்.10-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. இதில் நடிகர் சன்னி தியோல் பேசும்போது தென்னிந்திய தயாரிப்பாளர்களைப் பாராட்டினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
No comments