Breaking News

Meta: 8000 பேரைப் பணிநீக்கம் செய்யும் மெட்டா; விருப்ப ஓய்வு தரும் மைக்ரோசாஃப்ட்; காரணம் என்ன?

தனது நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் மொத்த பணியாளர்களில் 10 சதவிகித ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக மெட்டா நிறுவனம் அறிவித்திருக்கிறது.

அதே சமயம் மைக்ரோசாஃப்ட் நிறுவனம், தனது நிறுவனத்தின் ஊழியர்கள் ஆயிரக்கணக்கானோருக்குத் தாமாக முன்வந்து பணியில் இருந்து விலக வலியுறுத்தியிருக்கிறது.

மெட்டா | பணிநீக்கம்
மெட்டா | பணிநீக்கம்

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் 'மெட்டா' தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் சுமார் 78,865 பேர் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பு மற்றும் அதிகம் ஊதியம் பெறும் செயற்கை நுண்ணறிவு நிபுணர்களைப் பணியமர்த்துவதால் ஏற்படும் கூடுதல் செலவினங்கள் உள்ளிட்ட காரணங்களால் தங்களது நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்களில் 10 சதவிகிதம் அதாவது 8 ஆயிரம் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக மெட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

மேலும், காலியாக உள்ள 6,000 பணியிடங்களை நிரப்பப் போவதில்லை என்றும் அறிவித்திருக்கிறது.

அதே சமயம், மைக்ரோசாப்ட் நிறுவனம் நேரடியாகப் பணிநீக்கம் செய்யாமல், பணியாளர்கள் தாங்களாகவே முன்வந்து விலகும் 'விருப்ப ஓய்வு' (Voluntary Buyouts) திட்டத்தை வலியுறுத்திவருகிறது.

மைக்ரோசாஃப்ட் | பணிநீக்கம்
மைக்ரோசாஃப்ட் | பணிநீக்கம்

சுமார் 7 சதவிகிதம் கிட்டத்தட்ட 8,750 பேர் இந்த விருப்ப ஓய்வு திட்டத்தின் கீழ் வெளியேற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.

வெளியேறும் ஊழியர்களுக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பெரிய அளவிலான தொகையும், சிறப்பு சலுகைகளையும் கொண்ட இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்திருக்கிறது.

இந்த நிறுவனங்களின் பணிநீக்கம் டெக் துறை ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.



from விகடன்

No comments