தர வமரசனம: கடபபற கலககழ

ஒரு தெற்கத்தி கிராமம். அங்கே 2 கிராமியக் கலைக் குழுக்கள். காடப்புறா கலைக்குழுவை நடத்தி வரும் பாவாடைசாமி (முனீஷ்காந்த்), தன் குழுவின் கலைஞர்களை குடும்பமாகப் பாவிக்கிறார். அவர் தமிழை (ஹரிகிருஷ்ணன்), தத்துப்பிள்ளைபோல் வளர்க்கிறார். தமிழ், மற்றொரு கலைக்குழுவை நடத்தும் பென்சில் மீசை பெருமாளின் (சூப்பர்குட் சுப்ரமணி) தங்கை கலையரசியைக் (சுவாதி) காதலிக்கிறார். பாவாடை சாமிக்கும் பெருமாளுக்கும் தொழில் ரீதியான முரண்பாடுகள் இருப்பதால், காதலை ஒளித்தே வைத்திருக்கிறார்கள். இதற்கிடையில் பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிடும் ஈஸ்வரமூர்த்தியை (மைம் கோபி) எதிர்த்துக் களம் காணும் சரவணனை ஆதரிக்கிறார் பாவாடைசாமி. தேர்தலில் வெற்றி பெற்றது யார்? கிராமியக் கலைகளைப் புறக்கணிக்கும் ஈஸ்வரமூர்த்தியால், காடப்புறா கலைக்குழுவுக்கு என்ன நேர்ந்தது? தமிழ்
– கலையரசி காதல் கைகூடியதா என்ற கேள்விக்கு விடை சொல்கிறது கதை.
நடனம், கரகம் என கிராமிய ஆட்டம் எதுவானாலும் அதில் ஆபாசம் சேர்க்கமாட்டோம், கலைக்குழுவில் உள்ள பெண் கலைஞர்களை யாரும் தொடக்கூடாது என்பன உட்பட பாவாடைசாமி விதிக்கும் நிபந்தனைகள், அசலான கிராமியக் கலைஞர்கள் விரும்பும் சுயமரியாதையை பளிச்சென்று எடுத்துக்காட்டுகிறது. எதிர்தரப்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ள பென்சில் மீசை பெருமாள், பாவாடைசாமி எதிர்பாராத வகையில் பகையைச் சம்பாதித்துகொள்ளும் பஞ்சாயத்துத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி ஆகிய கதாபாத்திரங்கள் வழக்கமான சட்டக வார்ப்புகள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
No comments