Breaking News

அஞ்சாமை: திரை விமர்சனம்: ‘நீட்’டாக இருக்கிறதா உணர்வுபூர்வ போராட்டம்?!

பூ விவசாயியான சர்க்கார் (விதார்த்) தனது மனைவி மற்றும் மகன், மகளுடன் திண்டுக்கல் அருகே உள்ள கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். அவரது மகன் அருந்தவம் (கிருத்திக் மோகன்) மருத்துவராக ஆசைப்படுகிறார். அவரது கனவுக்கு உயிர் கொடுக்க நினைக்கிறார் தந்தை சர்க்கார். அதன்படி மத்திய அரசின் மருத்துவ கல்வி நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கிறார். ஆனால், அவர்களுக்கான தேர்வு மையம் ஜெய்ப்பூரில் ஒதுக்கப்படுகிறது.

இதனால் கடும் சிரமத்தையும் தாண்டி, தந்தையும், மகனும் மருத்துவ நுழைவுத் தேர்வுக்காக ஜெய்ப்பூர் செல்ல, அங்கு என்ன நடக்கிறது, அந்தச் சம்பவம் அவர்களின் வாழ்வில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது? மருத்துவத்தை கனவாக கொண்டிருக்கும் மாணவனுக்கு ‘தகுதித் தேர்வு’வினால் ஏற்படும் பிரச்சினைகள் என்ன? அது எப்பபடி பெற்றோர்களை பாதிக்கிறது என்பது படத்தின் திரைக்கதை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

No comments