‘டபுள் ஐஸ்மார்ட்’ பாடலில் சர்ச்சை வரிகள்: இயக்குநர் புரி ஜகன்நாத் மீது போலீஸில் புகார்

ஹைதராபாத்: தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் பேசிய வார்த்தைகளை சர்ச்சையான முறையில் பாடலில் பயன்படுத்தியதாக ’டபுள் ஐஸ்மார்ட்’ பட இயக்குநர் புரி ஜகன்நாத் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
'ஐஸ்மார்ட் ஷங்கர்' படத்தின் இரண்டாம் பாகத்துக்கு ‘டபுள் ஐஸ்மார்ட்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. ராம் பொதினேனி நடிக்கும் புரி ஜெகன்நாத் இயக்குகிறார். இப்படத்தில் இடம்பெற்ற ‘மார் முந்தா சோட் சிந்தா’ என்ற பாடல் அண்மையில் வெளியானது. இப்பாடலை காசர்லா ஷியாம் என்பவர் எழுத, மணிசர்மா இசையில் ராகுல் சிப்ளிகஞ்ச், கீர்த்தனா சர்மா பாடியுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
No comments